நிதி உதவி வழங்க !

QR

UPI ID : enb@axis.com

இணைப்புகள்

கிராம சேவகரை எதிர்த்து கிரான் பெண்கள் போராட்டம்


கிரான் பிரதேசசபைக்குட்பட்ட இந்த கிராம மக்களின் குறை தீர்க்கப்படுமா?


கிரான் பிரதேசசபைக்குட்பட்ட கிராமம் ஒன்றில், கிராமசேவகர் மற்றும் அரசதிகாரிகளை எதிர்த்து கிராமப் பெண்கள் துணிச்சலாகப் போரடிவருகின்றனர்.அதிகாரிகளின் அதிகார துஸ்பிரயோகம், மற்றும் நடத்தை காரணமாக அவர்கள் தமக்குத் தேவையில்லை எனக் கோருகின்றனர்.

  • காணாமல் போனோர் இழப்பீட்டீல் பங்கு-லஞ்சம்,
  • கடமை நேரத்தில் மது போதை,
  • பெண்கள் மீது பாரபட்சம்,
  • அதிகார துஸ்பிரயோகம்,
  • மக்களிடையே பிளவு,பிரிவினையைத் தூண்டுதல்,
  • குடி நீர்ப் பிரச்சனை,

என கிராம மக்களின் குற்றப்பட்டியல் நீள்கின்றது.இதனை எதிர்த்து பெண்கள் அமைப்பு ரீதியாகத் திரண்டு -மகளிர் அமைப்பு மூலம்-போராடி வருகின்றனர்.

பெண்கள் போராட்டம் வெல்க! அதிகாரத்துவம் ஒழிக!! மக்கள் அதிகாரம், ஜனநாயகம் மலர்க!!!

எனக் கிளர்ந்தெழும் மக்கள் எழுச்சியின் மூலமே இந்த கிராம மக்களின் குறை தீர்க்கப்படும்.☀

ஒத்தவை: